வெள்ளி, 11 ஜூலை, 2014

வெந்த புண்ணில் சிகரெட்டால் சுடும் இந்திய நிதியமைச்சர்!



இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தனது பட்ஜெட் அறிக்கையில் பல புதிய வரி திட்டங்களை அறிவித்துள்ளார். வழக்கம்போல் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏறத்தாழ அனைத்து ஆண்டுகளிலும் வரி உயர்த்தப்படுவதால் விலை அதிகரிக்கப்படும் பொருள் ஒன்று உண்டு. அது என்றைக்குமே விலை குறைந்ததில்லை. அது வேறொன்றுமில்லை. சிகரெட்தான். இந்த ஆண்டும் சிகரெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அதிகரிக்கப்படும் வரி விகிதம் ஆச்சரியத்தை தருகிறது. எக்சைஸ் வரியானது 11% சதவிகிதம் முதல் 72% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிகரெட்டு பாக்கெட்டின் விலை தற்போது ரூ.100 என இருந்தால் அது ரூ.111 -172 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே இனி "smoking is now more injurious to wealth." என்ற வாசகத்தை  சிகரெட்டு பாக்கெட்களில் பதிவதுதான் சரியாக இருக்கும்.

இதுகுறித்து அருண்ஜெட்லி கருத்து தெரிவிக்கும்போது இந்த முடிவானது மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.  மேலும் மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களின் விலையை கூட்டியதற்காக தான் வருத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. சிகரெட்டு எனபது உணவுப் பொருள் அல்ல. அதனால் ஒரு சிறு நன்மை கூட கிடையாது. சொல்லப்போனால் அது மனிதனை அடிமைப்படுத்தி மரணத்தை கொடுக்கும் ஒரு விஷம். புகைப்பதால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3,000 பேர் இறக்கின்றனர். நிதி அமைச்சருக்கு உண்மையிலேயே மக்களின் நலம் குறித்து அக்கரை இருக்குமானால் சிகரெட்டு மற்றும் பாண், குட்கா பொருட்களை தடை செய்யலாமே. ஆனால் இன்றுவரை சிகரெட்டு மற்றும் அனைத்து புகையிலை பொருட்களும் இந்தியாவில் சட்ட பூர்வமான பொருட்களாகவே உள்ளனவே. 

நிதி அமைச்சர் ஏன் இப்பொருட்களை தடை செய்யவில்லை. ஏனென்றால் நிதி அமைச்சரின் உண்மையான நோக்கம் எனபது மக்களின் உடல்நலம் அல்ல. அவரை பொருத்தவரை அரசாங்கத்தின் முக்கியமான வருமான ஆதாரம் பாண், குட்கா, சிகரெட்டு மற்றும் புகையிலை பொருட்கள்தான். தமிழ் நாட்டிற்கு டாஸ்மாக் போல. (சாராயம் விற்க டார்கெட் வைத்துக்கொண்டே மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் அரசாங்கம் உலகத்திலேயே நாமாகத்தான் இருப்போம்). புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டே மக்களின் உடல்நலம் பேசுகிறார் நிதி அமைச்சர்.

மது மற்றும் புகையிலை பொருட்களின் விலைகளை அரசாங்கம் கூட்டுவது வருமானத்திற்காகத்தான். ஏனென்றால் விலை ஏற்றத்திற்காக எவரும் போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கப்போவதில்லை என அமைச்சருக்கும், நிறுவனங்களுக்கும் நன்றாகவே தெரியும். அவ்வாறு நிறுத்த வேண்டும் என போதைக்கு அடிமையானவர்கள் நினைத்தாலும் அது அவர்களால் முடிகிறதில்லை. இதுவும் உலகம் அறிந்த விஷயம். இந்த உலகம் அறிந்த உண்மையை நீங்கள் உரக்க சொல்லலாமே. நிதி அமைச்சர் அவர்களே! நாங்கள் உங்களின் விலையேற்றத்தை குறை கூறவில்லை. உங்களின் பொய் வார்த்தைகள்தான் எங்களை காயப்படுத்துகின்றன.

விலை உயர்வினால் மேல் தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அப்படியானால் இதனால் பாதிக்கப்படுவது யார்? வழக்கம்போல் நடுத்தர மக்களும் கீழ் தட்டு மக்களும்தான். சிறிய வருமானத்தில் மேலும் ஒரு பகுதியை அவன் இதற்காக ஒதுக்க வேண்டும். விலை உயர்வு அவனை புண்ணாக்கி கொண்டிருக்கும் வேலையில், நிதி அமைச்சரின் போ(கே)லி வார்த்தைகள் வெந்த புண்ணில் சிகரெட்டால் சுடுகிறது.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. If we ban them, it would be more disastrous. Companies would supply them via black market and the govt will lose revenue.

    பதிலளிநீக்கு
  2. A accept your opinion. But, ban on tobacco products will surely reduce the number of consumers. Ganja was banned. But it is also available in black market. But the number of ganja consumers is very low compared to Tobacco consumers.

    பதிலளிநீக்கு
  3. I am a retail shopkeeper. Where I use to say " No sale of cigarettes, paans, gutcaas, snuffs, tobaccos and other likely items here, B'coz we don't want to kill your living organs for the sake of our earnings". I even have a stored message which I use to forward to some decent people who ask for the above items. If all the retailers do the same slowly the sale will go down and one day that will be stopped permanently.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. our finance minister does business in tobacco items. but you, a business man shows what is social responsibility of an individual.

      நீக்கு