ஞாயிறு, 21 அக்டோபர், 2012

திக்விஜய்சிங் காங்கிரஸ் கட்சியின் கதாநாயகனா? காமெடியானா? வில்லனா?



NDA ஆட்சியின்போது  வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் குடும்ப உறவினர்கள் ஊழல் செய்து சொத்து சேர்த்ததாகவும், அதற்கு காங்கிரஸ் கட்சியிடம் ஆதாரங்கள் இருந்ததாகவும், ஆனால் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கக்கூடாது என்பதற்காக அந்த ஊழலின் ஆதாரங்களை வெளியிடவில்லை என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் வதேரா, DLF , ஹரியானா காங்கிரஸ் அரசு ஆகியோருக்கிடையே பத்தரிக்கைகள் சொல்வது போல எந்த மறைமுக தொடர்பும் இல்லை என்றும், வதேராவிற்கு எந்தவித சிறப்பு சலுகைகளோ அல்லது நில ஒதுக்கீடோ வழங்கப்படவில்லை என்றும் சிங் தெரிவித்தார். வதேராவின் சொத்து குவிப்பு பற்றிய மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் சோனியா காந்தி  வதேராவின் ஆடிட்டர் இல்லை என்று சிங் பதில் அளித்தார். மேலும் வதேராவின் பிசினஸ் நடவடிக்கைகளுக்கும், சோனியா காந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறினார்.

CNN-IBN சேனலில் கரன் தாபர் நடத்தும் Devil's Advocate நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திக்விஜய்சிங், NDA ஆட்சியின் பொது நிறைய ஊழலுக்கான ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தன என்றும், ஆனால் அதனை நாங்கள் NDA ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எதிராக எனக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினால், அது நான் கூறும் பொய்யாகத்தான் இருக்கும் என்று சிங் தெரிவித்தார்.
நீங்கள் ஏன் அந்த ஆதாரங்களை வெளியிடவில்லை என்ற கேள்விக்கு நான் ஆதாரங்களை வெளியிட்டிருந்தால் அது வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கும் என்றும், அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான் அவர்கள் கடவுள்கள் அல்ல. அரசியல்வாதிகள் தங்களின் அனைத்து உறவினர்களின் நடவடிக்கைகளையும் கவனிப்பது அல்லது தொடர்வது எனபது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல என்று சிங் தெரிவித்தார்.

நீங்கள் ஏன் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உறவினர்கள் மீது புகார் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு நான் ஏன் புகார் கொடுக்கவேண்டும்?.  அந்த மாதிரி ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு பாராளுமன்றம் உட்பட நிறைய புலனாய்வு துறைகள் நாட்டில் உள்ளன என்று சிங் தெரிவித்தார்.

இதிலிருந்து திக்விஜய் சிங் என்ன சொல்ல வருகிறார்?.  எனது அனுமானம் இதுதான். 

1)பிஜேபி செய்த ஊழலை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது போல, நாங்கள் செய்த ஊழலை பிஜேபி கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும்.

2)ஊழலை கண்டுபிடிக்க பாராளுமன்றம், புலனாய்வு துறைகள் நாட்டில் உள்ளது. எதிர்க்கட்சிகளோ, பொதுமக்களோ அதுகுறித்து எந்த கேள்வியும் கேட்க கூடாது.

3)ஆளும் கட்சி செய்யும் ஊழலுக்கான ஆதாரங்கள் எதிர்கட்சிகளுக்கு கிடைத்தால் அவற்றை வெளியிடக்கூடாது. ஏனென்றால் அது எதிர்கட்சிகளின் வேலை அல்ல. மீறி வெளியிட்டால் ஊழல் செய்தவர்களின் மனம் புண்படும். மேலும் அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம், குட்டி உண்டு.  அவர்கள் ஊழல் செய்வதை பொது,மக்கள்  தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

4)சோனியா ஒன்றும் வதேராவின் ஆடிட்டர் இல்லை. வதேராவின் பிசினஸ் பற்றி சோனியாவிற்கு எதுவும் தெரியாது. அவரின் நடவடிக்கைகள் பற்றி சோனியாவிற்கு எதுவும் தெரியாது. ஆனால் வதேராவிற்கு ஆதரவாக  காங்கிரஸ் கட்சியின் பிரதமர் முதல் வட்ட செயலாளர்கள் வரை  வக்காலத்து வாங்குவார்கள்.

மேற்கண்ட உண்மைகளை சிங் வெளிப்படையாகவே கூறியிருப்பது அவரது மன தைரியத்தை காட்டுகிறது. மக்களால் என்ன செய்ய முடியும்? என்ற நம்பிக்கையின் காரணமாகவும் அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். அல்லது மக்களே ஊழலை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது பேட்டி கொடுக்கும் ஆர்வத்தில் உண்மைகளை அதன் உள்ளர்த்தம் புரியாமல் உளரியிருக்கலாம். அல்லது பரபரப்பாக பேசி பத்திரிக்கை செய்திகளில் இடம்பிடிக்க முனைந்திருக்கலாம். ஏனென்றால் பரபரப்பான அறிக்கைகளுக்கு சுப்ரமணியசாமிக்கு அடுத்து பெயர் பெற்றவர் திக்விஜய்சிங்தான்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. திக்விஜய்சிங்க பத்தி நன்றாக புரிந்துகொள்ள தங்களது பதிவு உதவியது. தமிழ்மணத்தில் முதன்முறையாக டாப் 20-ல் இடம் பெற்றமைக்கு பூங்கொத்து. தொடர்ந்து கலக்குங்க...!

    பதிலளிநீக்கு
  2. திக் விஜய் சிங் ஒரு அல்லக்கை! அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு