நிலாச்சோறு மறந்து
“டிவி”சோறு
உண்ணும
குழந்தைகள்
அறிவால்
உலகம் வென்று
தூரத்தால்
சொந்தம் இழந்த
வாரிசுகள்
தொலைகாட்சி நாடகங்களில்
தொலைந்துபோன
இல்லத்தரசிகள்
தூங்கியபின் வந்து
விழிக்கும் முன்
காணாமல் போகும்
குடும்பத்தலைவர்கள்
மூத்த குடிமக்களை
முதியோர் இல்லத்திற்கு
தத்து கொடுத்த
குடும்பங்கள்
பிரசவிக்கும் மண்ணில்
தனக்கு தானே
கட்டிய கல்லறைகளாக
மாட மாளிகைகள்
இயற்கையின்
உயிர்த்தன்மை கொன்று
நெளியும் புழுக்களாய்
மனிதர்கள்
எந்தன் கூட்டின்
நிலா முற்றத்தில்
ஒன்றாய் கூடி
கதைகள் பேசி
உண்டு களித்து
இன்புற்றிருக்கும்
புன்னகை முகங்கள்
இனி
காண்பது கூடுமோ?!
கனவாகி போகுமோ?!
ஏக்கங்களை
மூளையின் செல்களில்
புதைத்து
காத்திருக்கிறேன்
இயந்திரமாய்!
Tweet | |||||
அருமையான சிந்தனை...! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு