புதன், 7 மார்ச், 2012

சீனாவுடன் இந்தியா போர். நீங்கள் தயாரா?

இந்தியாவின் எதிரி நாடு எது என்றால் நம்மில் பலரும் பாகிஸ்தான் என்றுதான் பதில் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் சீனா தான் இந்தியாவின் உண்மையான எதிரி நாடு. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடும் பகை நாடு சீனா தான்.
பாகிஸ்தானுடன் இதுவரை நடந்த மூன்று  போர்களிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றிருக்கிறது. போரின் மூலம் இந்தியாவை வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தானும் உணர்ந்திருக்கிறது. எனவே பாகிஸ்தானை நமக்கு நிகரான எதிரியாக நினைக்க முடியாது. சீனாவை போல் ஆக்ரமிப்பு எண்ணம  கொண்ட ஒரு நாடு உலகத்தில் வேறு நாடு எதுவும் இல்லை எனலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கேற்ப பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடுகிறது சீனா. ராணுவ வழியில் பாகிஸ்தானுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது சீனா. அதற்கு பதிலாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் பணியை சீனாவுக்கு அளித்திருக்கிறது பாகிஸ்தான். அந்த பணியை காரணம் காட்டி ஏராளமான ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் குவித்திருக்கிறது சீனா.   இந்தியாவின் வட எல்லையில் மட்டும் சீனாவின் அபாயம் இல்லை.

            இலங்கையில் சீனாவின் ராணுவ  நடமாட்டம் இப்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு இரண்டு லாபம்.  இதன் மூலம் இந்தியாவை மிரட்டி தன அடிமையாக வைத்து கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார லாபம் அடைவது. இந்தியாவை அடக்க இலங்கை பயன்படுத்தும் துருப்பு சீட்டு சீனா.  சீனாவுக்கு இலங்கை ஒரு சிறந்த ராணுவ தளம்.
கடந்த வருடம் சீனாவின் ராணுவம் PLA பலமுறை இந்தியாவின் வட பகுதியில் எல்லை தாண்டி புகுந்தது. பல இடங்களில் சீனா என்று எழுதி வைத்து விட்டு போனார்கள். எந்த விதத்தில் பார்த்தாலும் சீனாவை நாம் நம்ப முடியாது. அதற்கு 1962 ல் நடந்த சம்பவத்தை நாம் கூற முடியும். இந்தோ சீனா பாய் பாய் என்று சொல்லி சொல்லியே கழுத்தை அறுத்தார்கள். எனவே சீனாவை எந்த காலத்தில் நாம் நம்பினாலும் நம்மை போல் முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.

          இப்போதும் சீனா நம் மீது ஒரு போர் நடத்திகொண்டு  இருக்கிறது. அது பொருளாதார ரீதியான போர் ஆகும். குறைந்த விலையிலான தரமற்ற பொருள்களை இந்தியாவில் கள்ளத்தனமாக குவிக்கிறது சீனா. இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் சந்தையை  நிர்மூலமாக்கி  இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைப்பதுதான் சீனாவின் நோக்கம். எனவே இந்திய பிரஜைகளான நாம் சீனாவின் தயாரிப்புகளை நிராகரிக்க வேண்டும்.

           அமெரிக்க உளவு நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் இந்தியா,  சீனாவுடன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட போருக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனாவின் கோபமூட்டும் செயல்களால் இந்தியா பொறுமை இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
             இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சீனாவுடன் போர் வரும். நம் வாழ் நாளிலேயே அந்த உக்கிரமான போரை பார்க்க போகிறோம் என்பது உறுதி. அது எப்போது என்பதுதான் கேள்வி.சீனா உலகிலேயே மிக பெரிய ராணுவம் கொண்ட நாடு. இந்தியாவை விட வலிமையான ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மால் சீனாவை சமாளிக்க முடியுமா?. நாம் பாகிஸ்தான் பற்றி கவலைப்பட வேண்டாம்.  நாம் உண்மையில் கவலைப்பட வேண்டியது சீனாவை பற்றிதான். தமிழ் நாடு சீனாவில் இருந்து தொலைவில் இருக்கலாம். ஆனால் இலங்கைக்கு பக்கத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது. சீனாவும் இலங்கையும் என்றைக்கும் இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் எதிரிதான்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை சார். வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  2. உண்மை அய்யா. நாம் ஒவ்வொருவரும் இந்திய தயாரிப்பை வாங்குகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் சீன தயாரிப்புகளை தவிர்த்தாலே போதும்
    நாகு
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு