ஞாயிறு, 18 நவம்பர், 2012

யாசர் அராபத் கல்லறை இன்று உடைப்பு! - மர்மம் உடைபடுமா!?


அராபத்தின் கல்லறை தோண்டஆயத்தம்!

பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள  மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.

அராபத் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அராபத் அணிந்திருந்த உடைகளை சுவிட்சர்லாந்தின் Institut de Radiophysique ஆய்வகம் ஆய்வு செய்தது. ஆய்வகத்தின் இயக்குனர் பிரான்காயிஸ் போசூட் (Francois Bochud) தெரிவிக்கையில் தங்களின் ஆய்வாளர்கள் அராபாத்தின் டூத் பிரஷ், உடைகள், அவர் அடிக்கடி தலையில் அணியும் கருப்பு வெள்ளை துணி ஆகியவை ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அப்போது அராபத்தின் உடையில் காணப்பட்ட அவர் உடல் திரவத்தின் கறையில் 180 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவில் 'போலோனியம்-210'  கதிர்வீச்சு ஐசோடோப் காணப்பட்டதாகவும், வழக்கமாக   5 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவில்தான் அது காணப்படும் என்றும் கூறினார்.  பெகொரல் (Becquerel) எனபது கதிர்வீச்சை அளக்க பயன்படும் அளவீடாகும். அவருடைய உடல் திரவத்தின் கரை இல்லாத ஆடையில் வெறும் 10 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே கதிர்வீச்சு காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அராபத்தின் உடலில் இந்த கொடிய கதிர்வீச்சு செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியாவை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

 இந்நிலையில் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரின் மேற்கு கரையில் உள்ள அராபத்தின் இல்லத்தில் உள்ள கல்லறை இன்று உடைக்கப்படுகின்றது. கான்கிரீட்டினால் கட்டப்பட்ட இந்த கல்லறையை முழுமையாக உடைத்து, அராபத்தின் உடலை வெளியே எடுக்கும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லறையை இடிக்கும் பணி  இன்று  தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 'போலோனியம்-210'  கதிர்வீச்சு ஐசொடோப் அவர் உடலில் உள்ளதா  என்று பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு அவரது உடலில் 'போலோனியம்-210' கதிர்வீச்சு ஐசொடோப் அளவுக்கும் அதிகமாக காணப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அராபாத்தின் மரணம் கொலை வழக்காக மாற்றப்படலாம்.
இதற்கிடையே அவரது உடலை தோண்டி எடுப்பது தெரியவந்தால், ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனாலும் புதைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவரத்தானே செய்யும்!?.

இதுபற்றிய விரிவான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். http://writervijayakumar.blogspot.com/2012/09/blog-post.html
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக