ஞாயிறு, 31 மார்ச், 2013

பிஜேபியை கைப்பற்றினார் நரேந்திர மோடி!



நரேந்திர மோடி பிஜேபியின் பார்லிமென்டரி போர்டில்  உறுப்பினராக ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். வரும் பொது தேர்தலில் பிஜேபி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரம் படைத்ததாக இக்குழு உள்ளது.  எனவே வரும் தேர்தலில் பிஜேபி எடுக்கும் முக்கிய முடிவுகளில் மோடியின் ஆதிக்கம் நிறையவே இருக்க வாய்ப்பிருக்கிறது.  அதே நேரத்தில் பிஜேபியில் மோடியின் ஆதிக்கம் இப்போதே கொடிகட்டி பறப்பதை நாம் உணர முடிகிறது. 

மோடியின் நெருங்கிய கூட்டாளியான அமித் ஷா இக்குழுவில் இடம் பெற்றுள்ளது பலருக்கு வியப்பை அளித்துள்ளது. இந்த அமித் ஷா 2005 – ஆண்டில் நடைபெற்ற சொராபுதீன்  ஷேக்  போலி என்கௌண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதனாலேயே தான் வகித்து வந்த குஜராத் உள்துறை மந்திரி பதவியையும் இழந்தவர். தற்போதும் இவர் மீது ஆள் கடத்தல், கொலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெயிலில்தான் தற்போது இருந்து வருகிறார்.  இவர் பிஜேபி கட்சியின் பார்லிமென்டரி போர்டில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. பிஜேபியில் மோடியின் ஆதிக்கமும், செல்வாக்கும் தவிர்க்க முடியாததாக இருப்பதையே அமித் ஷாவின் நியமனம் காட்டுகிறது.

பிஜேபியில் மோடிக்கு இணையாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் சௌஹானை பார்லிமென்டரி போர்டு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கை பிஜேபியில் மற்ற எந்த தலைவராலும் ஆதரிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் அத்வானி Vs மோடி என்று கருதப்பட்ட போட்டியை அத்வானி Vs மற்ற பிஜேபி தலைவர்கள் என்று மோடி புத்திசாலித்தனமாக திசை திருப்பியுள்ளார்.  இது  பிஜேபியில் தனக்கு இருந்த எதிரிகளை மோடி வெற்றிகரமாக வீழ்த்தி வருவதைத்தான் காட்டுகிறது. ஏற்கனவே பிஜேபியின் தனிப்பெரும் தலைவராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி கண்டு வரும் மோடி, வரும் மக்களவை தேர்தலில் இந்திய  அரசியலிலும்  தான் ஒரு சக்தி மிக்க தலைவர் என்ற சாதனையை நிகழ்த்த நினைக்கிறார். கட்சியை கைப்பற்றிய மோடி ஆட்சியை கைப்பற்றுவாரா?. பொறுத்திருந்து பார்ப்போம்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. நல்லதொரு கட்டுரை.வேறு வேறு கருத்துக்கள்கள் கொண்டோரும் அவருக்கு சர்ந்தர்பம் கொடுத்து பார்ப்பதே சரியானதாகும்.

    பதிலளிநீக்கு