திங்கள், 19 மார்ச், 2012

போபார்ஸ் பீரங்கி ஊழலும், காங்கிரசின் சூழ்ச்சி பிரச்சாரமும்...

அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போதும் உணவருந்தும் போதும் நண்பர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவது உண்டு. அது பொதுவாக ஒரு தரமான கருத்து பரிமாற்றமாக இருக்கும். பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளும் களமாகவும் அது இருக்கும்.

அன்று உணவருந்தும் பொது திடீர் என்று போபார்ஸ் பீரங்கி ஊழல் பற்றி பேச்சு எழுந்தது. எதிர் கட்சிகளே மறந்து போன பீரங்கி ஊழல் பற்றி பேச்சு எழுந்ததும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக நண்பர் ஜஸ்டின் அவர்கள் கூறிய கருத்து என்னை ஈர்த்தது. அவர் கூறிய கருத்து இதுதான்.

போபார்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்று பத்திரிகைகளும் எதிர் கட்சிகளும் குற்றம் சாட்டினாலும் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற போபார்ஸ் பீரங்கி தான் காரணம்.  போபார்ஸ் பீரங்கி இல்லை என்றால் நாம் கார்கில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. எனவே போபார்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்ற வாதம் உண்மையானதல்ல.என்பதே அவர் கருத்தாகும்.

இது நண்பருடைய சொந்த கருத்து அல்ல என்பது எனக்கு புரிந்தது. அது கார்கில் போரின் போது காங்கிரஸ் தலைவர்களால் முன் வைக்கப்பட்ட கருத்தாகும்.காங்கிரஸ் தலைவர்கள் எப்போதுமே பிரச்சினைகளை திசை திருப்புவதில் வல்லவர்கள்.காங்கிரசின் சூழ்ச்சிக்கு என் நண்பரும் பலியாகி இருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது.

நான் என் நண்பரின் கருத்துக்கு மறுப்புரை தெரிவித்தேன்.

போபார்ஸ் பீரங்கியின் தரத்தினை குறித்து எவரும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. அது உலகின் மிக சிறந்த பீரங்கியாகவே இருக்கலாம். பிரச்சினை அதுவல்ல. அந்த பீரங்கி வாங்கப்பட்ட போது கை மாறிய கமிஷன் தொகை எவ்வளவு? யாருக்கு கமிஷன் வழங்கப்பட்டது.? அவ்வாறு வழங்கப்பட்ட கமிஷன் தொகை இந்திய தேசத்தின் பணம் அல்லவா? என்பதுதான் உண்மையான பிரச்சினை. இன்றைய கால கட்டத்தில்  மேற்கண்ட கேள்விகளுக்கு நமக்கு விடையும் தெரியும்.  கமிஷன் தொகை 64 கோடி ரூபாய் போய் சேர்ந்த குவோட்ட்ராச்சி யார்?. குவோட்ட்ராச்சிக்கும், சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம்?. குவோட்ட்ராச்சியை தப்ப விட்டது யார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பாத  காங்கிரஸ் கட்சியினர்  பிரச்சினையை திசை திருபபுவதர்காகத்தான் போபார்ஸ் பீரங்கியின் தரத்தை பற்றி பேசுகின்றனர். காங்கிரசின் சூழ்ச்சி பிரச்சாரத்தை நீங்களும் நம்பிவிட்டீர்கள்.என்று நான் கூறினேன்.

நான் பேசி முடித்ததும் நண்பர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவருக்கு நான் சொன்ன வாதத்தில் உள்ள உண்மை புரிந்திருக்கும். அவரை சொல்லி குற்றமில்லை. காங்கிரசின் குள்ள நரித்தனம் அது.

இப்போதும் கூட அண்ணா ஹசாரே கொண்டு வந்த லோக் பால் திட்டத்தை திசை திருப்ப  வலிமையற்ற லோக் பால் திட்டத்தை கொண்டு வந்து லோக் பால் திட்டத்தையே காமெடி ஆக்கியது ,ஈழத்தமிழர் உரிமை பிரச்சினையை தீவிர வாத பிரச்சினையாக திசை திருப்பியது மட்டுமில்லாமல் தன குடும்ப பழிவாங்களுக்கு பயன்படுத்தி கொண்டது என்று காங்கிரசின் குள்ள நரித்தனங்களுக்கு  உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.


More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. என்னல்லாமோ சொல்றீங்க. பெரிய விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை டேனியல் சார்!

      உங்கள் வழி காட்டுதல் எப்போதும் எனக்கு தேவை. நன்றி!

      நீக்கு